Ads

திங்கள், 23 ஜனவரி, 2012

மனிதா! உன்னை புரிந்துகொள்!

பிறவிக் கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமாகும். அதிலும் மனிதராய்ப் பிறப்பது மகத்தான அருட்கொடையாகும். ஏக இறைவனின் உள்ளமையையும், வல்லமையையும் பறைசாற்றும் அற்புத அத்தாட்சிகளில் ஒன்றாக மனித இனம் விளங்குகிறது.

எந்த ஒரு பொருளுமாக இல்லாதிருந்த நிலையிலிருந்து மனிதன் என்ற உள்ளமைக்கு அல்லாஹ் படைத்தான்.

படைத்ததோடு தனது கடமை முடிந்து விட்டதாய் கருதாமல், மனித இனம் சிந்திக்கவும் செயல்படவும் அறிவையும், ஆற்றலையும் தந்தான்.

அந்த அறிவையும், ஆற்றலையும் மனித இனம் தன் மனம்போன போக்கில் பயன்படுத்துமேயானால், அவை நஷ்டத்துக்கு ஆளாகிவிடும் என்று மகத்தான தன் கருணையால் தன்புறத்திலிருந்து பிரகாசமான வேதத்தையும் உயர்மிகு திருத்தூதர்களின் ஞான உபதேசங்களையும் தந்து அவற்றைக் கொண்டு செயல்பட அழைக்கிறான்.

விரைவாக முன்னேற வேண்டுமென்ற உந்துதலுக்கும், பேராசைக்கும் ஆட்படும் மனிதனோ நறுமணமிக்க மார்க்கத்தின் எந்த வாசனையையும் எடுத்துக் கொள்ள தயாரில்லை.